Posts

Stolen - Hindi Movie

Image
சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளி வந்த திரைப்படம் "Stolen".   இத்திரைப்படத்திற்கு நல்ல ரேட்டிங் இருந்ததாலும் சமூக வலைத்தளங்களிலும் இதைப்பற்றிய சலசலப்பு சற்று அதிகமாக இருந்ததாலும் சரி பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். நடு இரவில் ரயில்வே பெஞ்சில் உறங்கிக் கொண்டிருக்கும் "Jhumpa" வின் 5 மாத பெண் குழந்தை  களவு போகிறது. அவ்விடத்தில் எதிர்பாரா விதமாக மாட்டிக்கொள்ளும் இரு சகோதரர்கள் காவல்துறையை நம்பாமல் எவ்வாறு குழந்தையை மீட்டெடுக்க உதவுகிறார்கள்?!  இதற்கிடையில் குழந்தையை பறிகொடுத்தவளைப் பற்றி போலீசார் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையா?!  ஒரு விஷயத்தை நன்கு அறிந்து கொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் அதைப்பார்த்த இளைஞர்கள் உடனேயே குற்றவாளிகளை தண்டிக்கும் நீதிமான்களாக மாறுவதும் அதனால்  ஏற்படும் விபரீதங்கள் என்னென்ன என்றும் இந்த ஒன்றரை மணி நேர திரைப்படத்தில் மிக நேர்த்தியாகக் கூறியிருக்கிறார் இயக்குனர் கரண் தேஜ்பால். "Stree" படத்தில் நடித்த அபிஷேக் பானெர்ஜிக்கு இதில் மிக வித்தியாசமான கதாபாத்திரம். அவர் தம்பியாக வருபவர், காவல் அதிகாரி என்று விரல் விட்டு எண்ணக்கூ...

விடாமுயற்சி

Image
"மனிதம் மனம் ஒரு குரங்கு" இந்த வாசகம் தான் எத்தனை  உண்மை என்பதை எனக்கு உணர்த்திய திரைப்படம் 'விடாமுயற்சி". என்ன ஒரே குழப்பமாக உள்ளதா?! விளக்குகிறேன் வாருங்கள் 😀 நமக்கு தான் படத்தோடு சேர்ந்து Live Commentary கொடுப்பது, இதற்கு அடுத்து இதுதானே வரும் என்று யூகிப்பது எல்லாம் கை வந்த கலை ஆச்சே!!! மாஸ் ஹீரோக்களின் படங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. பொதுவாகவே முன்னணி ( (வயது முதிர்ந்த)  கதாநாயகர்களின்படங்களை பார்க்கும் போது நம்மில் எழும் சில  எண்ணங்கள் 👇👇👇 1. எதுக்கு இப்பிடி ஹீரோயிச காட்சிகளை Scene By Scene வைக்கணும், Punch Dialogue பேசி கொல்லனும்?! - அஜித் இப்படத்தில் இவை எதையும் 90% கையாளவில்லை 2. வயதிற்கு ஏற்ற வேடத்தில் நடிக்கலாமே?!  3. எதுக்கு Young Heroines கூட நடிக்கணும்?! 4. Lip Sync கூட சரியா செய்ய தெரியாத North Indian Actors ஐ வில்லனா போட்டா ஒரு ஒரிஜினாலிட்டி-ஏ இல்லை! 5. எல்லா Crimes -ம் இந்தியால தான் நடக்கணுமா?! நம்முடைய Pulse -ஐ நன்கு அறிந்த இயக்குனர் மேற்கூறிய விஷயங்களை கவனமாக தவிர்த்திருந்தார் ஆனால் விடாமுயற்சி படத்தை பார்த்த போது விடாமல் எண்ணில் ஓடிய "Min...

விடுதலை 1 & 2

Image
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன். இளவரசு மற்றும் பல்வேறு அபிமான நட்சத்திங்களின் நடித்து  இளையராஜா இசையில் 2023-ம் ஆண்டில் விடுதலை பாகம் ஒன்று வெளியானது.  "வழி நெடுக காட்டு மல்லி" என்று இளையராஜாவின் குரலில் வந்த பாடல் தாறுமாறாக ட்ரெண்டிங் ஆனதில் அனைவருக்கும் இப்படம் அறிமுகமானது.  தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகம் 2024 டிசெம்பரில் வெளிவர இவ்விரு பாகங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக Amazon Prime-ல் சமீபத்தில் பார்த்தேன் அதன் விளைவே இந்த விமர்சனம்! விடுதலை 1 மலைக்கிராமத்தில் போலீஸ் டிபார்ட்மெண்டில் ஜீப் Driver ஆக வேலை கிடைக்கப்பெற்று அங்கு வரும் சூரி-யின் குரல் வழியே 80-களில்  கதை பயணிக்கிறது. மக்கள் படை என்ற இயக்கம் தீவிரவாத இயக்கமாக அரசால் முத்திரை குத்தப்பட்டு அதன் தலைவரான வாத்தியார் என்னும்  பெருமாளை காவல் துறை முகாம் அமைத்து தீவிரமாக தேடி வருகிறது. சமீபத்தில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு அவர்களின் கைவண்ணமே என்று கண்டறியப்பட்டு அவ்வியக்கத்தை ஒடுக்கிய ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு அரசால்  தள்ளப்பட்ட காவல் துறை தங்களு...

மெய்யழகன் Vs லப்பர் பந்து

Image
  மெய்யழகன்  லப்பர் பந்து  C.பிரேம் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி மற்றும் பல அபிமான நட்சத்திரங்கள் நடிப்பில் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றி நடை போடுவதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம். அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்ட திரைப்படம்.  படத்தின் முழுக் கதையும் இரு ஆண் கதாபாத்திரங்களை சுற்றியே நகர்கிறது  இளமைக்காலத்தில் இவ்விரு கதாபாத்திரங்களும் சந்தித்திருப்பதாகவும் மறுபடியும் நிகழ்காலத்தில் சந்திப்பதாகவும் காட்டப்படுகிறது  80, 90-களில் வெளிவந்த திரைப்பட  பாடல்களை பின்னணியில் இசைக்க விடுவது இன்றைய ட்ரெண்ட்..இரண்டு திரைப்படங்களிலும் இதைக் காணலாம்  இரு முக்கிய  கதாபாத்திரங்களை இணைக்கும் common factors  ஊரும் உறவுகளும் அவைகளின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் பாசமும் நட்பும்  இரு முக்கிய கதாபாத்திரங்களை இணைக்கும் common factor கிரிக்கெட்டின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் தீராக்காதல் என்று நமக்குத் தோன்றினாலும் அவர்களின் குடும்பத்தினர் மேல் கொண...

மெய்யழகன்

C.பிரேம் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி மற்றும் பல அபிமான நட்சத்திரங்களின் நடிப்பில் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து வெற்றி நடை போடுவதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் "மெய்யழகன்". படம் பார்த்த ஒரு சாரார் " மூணு மணி நேரம் சொன்னதையே சொல்லி கழுத்தறுத்துட்டாங்க", "Whatsapp forward மாதிரி இருந்துச்சு", "இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் எங்க இருக்குறாங்க?",  "Emotions - ஐ காட்றேன் என்று ரொம்ப ட்ராமா பண்ணிட்டாங்க" போன்ற விமர்சனங்களை முன் வைக்க... மறு சாரார் "குடும்பத்தோட உட்கார்ந்து பாக்குற மாதிரி தரமான படத்தை எடுத்திருக்காங்க", "பல இடங்கள்ல அழ வச்சுட்டாங்க", "எல்லாரும் அருமையா நடிச்சிருக்காங்க" போன்ற நேர்மறை விமர்சனங்களை முன் வைக்க..Netflix-ல் வெளிவந்த இப்படத்தை பார்த்த என் கருத்து இந்த இரு சாரரோடும் ஒத்துப் போனது!!! என்னைப் பொறுத்தவரை "மெய்யழகன்" திரைப்படத்தை  ஒரு புத்தகம் வாசிக்கும் அனுபவத்தோடு மட்டுமே ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தன்னுடைய Inner emotion - களுடன் தொடர்பற்ற ஒருவனாக தன்னை வெளிக்காட்டிக் ...

வாழை

Image
"வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ்க" "வாழை குலை தள்ளுவது போல உங்கள் குலம் தழைக்கும்" என்று வாழையை நல் வாழ்விற்கு ஆதாரமாய் மட்டுமே  பார்த்துப்  பேசிப் பழகிய நமக்கு வாழையையே தங்களின் வாழ்வாதாரமாக நம்பும் மக்களின் பசி, ஏமாற்றம், கனவு, காதல் மற்றும் சோகம்  கலந்த வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக  நமக்கு படம் பிடித்துக் காட்ட முயன்று வென்றிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்!!! உண்மைச் சம்பவத்தை கதைக் கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் சிவனைந்தன் என்னும் 13 வயது இளைஞன். அவனை ஒட்டி நகரும் கதை அவன் மிக விரும்பும் பள்ளி வாழ்க்கையையும், விடுமுறை நாட்களில் அவன் செய்யும்  (சற்றும் பிடிக்காத)  காய் சுமக்கும் வேலையையும் சுற்றி நகர்கிறது. பூங்கொடி டீச்சர் மேல் அவனுக்கு ஏற்படும் ஈர்ப்பை இயக்குனர் அடிக்கடி  கோடிட்டு காட்டுவது சற்று களைப்பை தந்தாலும் நடுநடுவே அம்மா மற்றும் அக்காவுடனான எமோஷனல் காட்சிகளை Subtle ஆக காமித்து கண்களில் கண்ணீர் வரவைக்கிறார். தங்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள் என்று தெரிந்தும் தான் வாங்கிய முன் பணத்திற்காக  உ...

பரியேறும் பெருமாள்

இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படைப்பான  "பரியேறும் பெருமாள்" இயக்குனர் ரஞ்சித்தின் தயாரிப்பில் , சந்தோஷ் நாராயணனின் இசையில் வெளிவந்திருக்கிறது. படத்தின் தலைப்பையும், போஸ்டர், டீஸர் ஆகிவற்றை பார்க்கும் போதும் படத்தின் மூலக்கதையை நம்மால்  ஓரளவு யூகிக்கிக்க முடிகிறது...நம் யூகமும் ஓரளவிற்கு சரியாகவே இருப்பினும் நம்மால் நினைத்தும் பார்க்கமுடியாத சிறு சிறு நுணுக்கங்களை திரைக்கதையில் புகுத்தி படத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்கிறார் அறிமுக இயக்குனர். படம் தொடங்கியதும் வரும் "கருப்பி " பாடல் மேற்கத்திய "Rap" ஸ்டைலில் எழுதி பாடியிருக்கிறார்கள். கேட்டதும் "என்ன பாட்டு இது " என்று தோன்றினாலும் பாடல் முடியும் பொழுது "நல்லா இருக்கே " என்று எண்ண வைக்கிறது. பின்தங்கிய மக்கள் வாழும் கிராமத்தில் இருந்து சட்டக்கல்லூரியில் படிக்க வரும் மாணவனாக கதிர் கனகச்சிதம். "பரியேறும் பெருமாள் " கதாபாத்திரத்தின் மேல் அனாயசமாக  ஏறி  சிம்மாசனம் போட்டு அமருகிறார் (நம் மனதிலும் கூட !!!). கோபம், சிரிப்பு, சோகம், பயம், ஏமாற்றம், அதிர்ச்சி  என்று அனை...