Posts

Showing posts from August, 2021

கர்ணன்

ஏப்ரல் மாதம் Prime-ல் வெளியான இப்படத்தைப் பார்க்க இப்பொழுதுதான் எனக்கு  தைரியம் வந்தது. படத்தின் One Liner-யைத் தவிர வேறு விவரங்கள் எனக்குத் தெரியாததாலும் இப்படத்தைப் பற்றிய Promo-க்களை அதிகம் பார்க்காததாலும் எனக்கு படம் நேற்று வெளிவந்தது போன்ற தாக்கத்தையே ஏற்படுத்தியது. "பரி ஏறும் பெருமாள்"-யைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு தான் இந்த " கர்ணன்". எதிர்பார்த்த அளவு படத்தில் வன்முறை இல்லை எனினும் "இதோ இவனை கொலை செஞ்சுருவாங்க போல", "இந்த சின்ன பையனை ஏதாச்சும் பண்ணிருவங்களோ" என்ற பதைபதைப்புடனேயே படம் பார்க்க வேண்டி இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் அதற்குத்  துணை செல்கிறது. பாரதிராஜாவை அடுத்து மாரி செல்வராஜ் கிராமத்து வாழ்க்கையையும் அதன் மக்களையும் நம் கண் முன்னே அரிதாரம் பூசாமல் காட்டி இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது. சொந்த அனுபவம் இல்லாமல் இதைச் செய்யவே முடியாது. மனதில் இருந்து வந்ததால் தான்  வெற்றியும் அடைந்திருக்கிறது. படத்தில் இயக்குனர் பல்வேறு குறியீடுகளின் மூலம் ஏகப்பட்ட சங்கதிகளைச் Subtle ஆக சொல்லிக்கொண்டே செல

நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி -7

 இப்படியே இவ்விரு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக என்னென்ன செய்தன என்பதையும் அதில் பாலஸ்தீன அப்பாவி மக்கள் "இண்டிஃபதா" என்ற பெயரில் எப்படி ஈடுபட்டார்கள், பாடுபட்டார்கள்  என்பதையும் மிக மிக விளக்கமாகவே  கூறுகிறார். இப்படியே இருந்தால் எப்படி என்று நார்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் 1993-ல்  நடந்த அமைதி ஒப்பந்த  நடவடிக்கையை ஆதரித்த அராஃபத் மேல்  மக்கள் கோபம் கொள்கிறார்கள்!!! இப்பொது நாம் அனைவருக்கும் பரிச்சயமான  சதாம் ஹுஸைனும் (குவைத் யுத்தம்) கதைக்குள் வருகிறார் இங்கு நாம் புரிந்து கொள்வதற்கு வசதியாக இலங்கை விடுதலைப் புலிகளின் போராட்டங்களை  ஒப்பிட்டு அலசுகிறார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடம் பிடிப்பதில் மட்டும் பிரச்னை இல்லை அல் அக்ஸா மசூதியை இடித்து விட்டு Synagogue கட்டுவது, ஒரே புனிதத்தலம் என்று மத ரீதியிலான பிரச்னை வேறு!!! இரு நாடுகளுமே ஆயுத தாக்குதலைதான் செய்தது. பாலஸ்தீனம் செய்தது தீவிரவாதம்..இஸ்ரேல் செய்தது போர் எனப்பட்டது!!! 1979-ற்கு அடுத்ததாக அமெரிக்கா 2001-ல்  அமைதி நடவடிக்கைக்கான "Road Map" வரைந்து கொடுத்து "இனிமேயாச்சும் போயி பிள்ளைங்களை படிக்க வைங்கப்

நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி - 6

 ஒரு அப்பத்தை குரங்கிடம் கொடுத்து சரி சமமாக பங்கு கேட்ட இரண்டு பூனைகளுக்கு நடந்த கதை உங்களுக்கு தெரியும் தானே? அதே முடிவு தான் ஐ.நா. கொடுத்த நிலத்தை ஏற்காத பாலஸ்தீனுக்கும்  நடந்தது. எகிப்து, லெபனான், சிரியா, ஈராக், ஜோர்டான் கூட்டணியில் பாலஸ்தீன் அன்று பிறந்த இஸ்ரேலை எதிர்த்தது. எதிர்பாரா விதமாக இஸ்ரேலின் கை ஓங்க, ஐ.நா. அமைதிப் பேச்சு எடுக்க..  வென்ற பகுதிகளை கூட்டணி நாடுகள் தங்கள் வசப்படுத்திக் கொண்டு பாலஸ்தீனை கைவிட்டு விட்டது. இப்போது பாலஸ்தீனமே வரைபடத்தில் இருந்து இல்லாமல் போனது..பாலஸ்தீனியர்கள் முதல் முதலாக அகதிகள் ஆகினார்கள்!!! இப்படியாக சென்று கொண்டிருந்த கதைக்கு ஒரு Break கொடுத்து விட்டு பாலஸ்தீனியர்களுக்கு ஓரளவு நன்மை செய்ய முயற்சி செய்த யாசர் அராபத் பற்றி சற்று விரிவாகவே எழுதியிருக்கிறார். தமிழ் சினிமா பார்ப்பது போல் இருந்தது!!! வரலாற்றில் இஸரேலுக்கு பெயர் வாங்கித் தந்த சூயஸ் கால்வாய் பிரச்னையைப் பற்றியும் "Three Musketeer" Operation குறித்தும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார். Side Track-ல் எகிப்தின் ராணுவ ஆட்சியும் அங்கிருந்த அரசியில் சூழல் பற்றியும்  நமக்கு தெரிவித்து வி

நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி -5

  யூதர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை உலகம் சுழலாமல் நிற்குமா என்ன?முதல் உலக யுத்தம் வருகிறது அதிலும் யூதர்கள் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி என்று தாங்கள் தங்கியிருக்கும் தரப்பிற்காக மட்டுமல்லாமல்  தங்களின் தேசக்கனவு நனவாகும் என்ற ஆவலுடன் பங்கேற்கிறார்கள் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆயுதங்களும் விஷ வாயுவும் யூதர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை தான்!!  1917-ம் ஆண்டு பிரிட்டன், துருக்கியின் ஆளுகைக்கு உட்பட்ட பாலஸ்தீனை தாக்கியது. அதில வெற்றியும் கண்டது. யூதர்களுக்கு அளித்த வாக்குப்படி "பா ஃல்பர்" பிரகடனம் உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் லாபங்கள் பிரிட்டனுக்கு இல்லாமல் இல்லை. இஸ்ரேல் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டதே ஒழிய தங்கள் கனவு நிஜமாக யூதர்கள் இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை தான் வந்தது. புத்தகத்தின் இப்பகுதிக்கு வந்ததும் தான் நாம் தற்காலத்தில்  கேள்விப்படும் மேற்கு கடற்கரை, காஸா போன்ற இடங்கள் பரவலாக குறிப்பிடப் படுகின்றன.அப்பொழுதும் கூட ஜோர்டானில் மன்னர் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு என

நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி -4

பல்வேறு ஐரோப்பிய தேசங்களுக்குச் சென்று Settle ஆகியிருந்த யூதர்களை  மறுபடியும் காலம் விரட்டி அடிக்கத் தொடங்கியது. கி,பி.1492-ல் உயிர் பிழைக்க வேண்டுமென்றால் வேறு வழி இல்லை என்ற நிலையில்  ஸ்பெயினிலிருந்து வெளியேறி ஹாலந்து , மொராக்கோ, பிரான்ஸ், இத்தாலி என்று  குடியேறினார்கள். அதிகம் பேர் மத்திய ஆசியாவிற்கு வந்தனர் என்கிறார் ஆசிரியர். அதன் பின் போர்ச்சுகீசியர்களாலும் விரட்டி அடிக்கப்பட்ட யூதர்கள் சுல்தான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சிரியா மற்றும் துருக்கியில் மனமுவந்து ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். தாங்கள் இடம் பெயர்ந்த தேசங்களில் இருந்து கொண்டு தங்களின் புராதான மொழியான ஹீப்ருவை யூதர்கள் மீட்டுக் கொண்டிருந்த வேளையில் பதினாறாம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் கிங்- ஆல் ப்ராட்டஸ்டண்ட் ஆரம்பிக்கப்பட்டதன் விளைவாக கிருஸ்துவைக் கொன்றவர்கள் என்ற பெயரில் யூதர்கள் மேல் கிருத்துவர்களுக்கு இருந்த வெறுப்பு எவ்வாறு பன் மடங்கு பெருகியது என்பதை இங்கு  மிக விரிவாக அலசுகிறார் ஆசிரியர். நாடு கடத்தப் பட்டுக்கொண்டிருந்த யூதர்கள் ஐரோப்பிய தேசங்களில் சித்திரவதை செய்யப்பட்டு  கொன்று குவிக்கப்பட்டலாயினர். இங்கிர

நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி - 3

 அப்பாடா ஒரு யூத மன்னன் வந்துட்டாரு என்று நிம்மதி பெரு மூச்சு விடும் வேளையில் ஆசிரியர் "காட்டரபிகளாக சிதறிக்கிடந்த நாலாயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்களை இஸ்லாம் என்ற மதத்தின் கீழ் ஒருங்கிணைத்து அவர்களுக்கென்று ஓர் சரித்திரத்தை உருவாகித் தந்த முகமது நபியின் பிறப்பு மற்றும் அவர் தன்னை தேவ தூதராக எவ்வாறு உணர ஆரம்பித்தார் அவரையும் மக்கள் எவ்வாறெல்லாம் துன்புறுத்தினர்" என்று மிக விரிவாகக் கூறுகிறார். படிப்பதற்கு சுவாரசியமாக பல அறியாத விஷயங்களை ஆதாரப் பூர்வமாக முன் வைக்கிறார்.  இஸ்லாம் மிக வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த கால கட்டத்தில் எல்லாம் யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எந்த பிணக்கும் இல்லை. காலம் செல்லச் செல்ல யூதர்கள், இஸ்லாமியர்களுக்கு தாங்கள் அளித்த வாக்குப்படி உதவ மறுத்தனர், முகமது நபியை இறை தூதராக ஏற்றுக் கொள்ள மறுத்தனர். முகமதுவோ யூதர்களின் மத, பழக்க வழக்கங்களில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை விமரிசிக்க..  ஆரம்பமான பிரச்சனை முகமது நபி இஸ்லாமியர்களை மெக்கா நோக்கி தொழச் செய்த போது பூதாகரமாக வெடித்தது. கலீஃபா ஆன முகமது நபி மதத்தோடு நாட்டையும் விஸ்தரிக்க ஆரம்பித்தார் ஆனால் அ

நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி -2

ரோமின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஜுதேயாவில் புதிய பிரச்சனை உருவானது. ரோமானிய மன்னரே கடவுள் என்று அனைத்து தேவாலயங்களிலும் ப்ரதிஷ்டை செய்யப்பட  "ஜெஹோவா" என்ற ஒருவரே எங்கள் கடவுள் என்று யூத  புரட்சியாளர்கள் ரோமானியர்களின் ராணுவத்தை சிதறடித்து ஜெருசலேம் மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதியை தங்கள் வசம் கொண்டு வருகின்றனர்  எனினும் வெகு விரைவிலேயே ரோமானிய ஆட்சி திரும்பியதோடு மட்டுமல்லாமல் புகழ் வாய்ந்த சாலமன் ஆலயம் சூறையாடப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது. கி.பி.70-ம் ஆண்டு இடிக்கப்பட்ட கோவில் இன்று வரை எழுப்பப்படவில்லை!!! "அரேபியர்கள் பற்றி சொல்லவே இல்லையே?" என்று நினைக்கிறீர்களா? அப்பொழுதெல்லாம் அவர்கள் பார்வையாளர்களாக "காட்டரபிகள்" என்ற பெயரோடு குழுக்களாக  ரோமானியர்களின் ஆளுகைக்கு உட்பட்டு 80-க்கும் மேற்பட்ட   சிலைகளை  வழிபாடு செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள். இதற்கிடையில் யூதர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதை ஓர் வேள்வி போல செய்யத் துவங்கினர் அதுவே ரோமானியர்களை வெல்லவதற்கான வெற்றிப்பாதையை அமைத்துக் கொடுக்கும் என்று தங்களின் மத போதகர்களால் அறிவுறுத்தப்பட்

நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - Part 1

 இஸ்ரேல்- பாலஸ்தீன் இவ்விரு தேசங்களுக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்தது என்றாலும் அதற்கான மூல காரணங்கள் எவை என்று  நம்மில் பலருக்குத்  தெரியுமா என்பது சந்தேகமே. இந்நிலையில் கடந்த மே மாதம் (2021) இரு நாடுகளுக்குமிடையே வெடிகுண்டு தாக்குதல்கள்  நடந்ததையும் அதில் பொது மக்கள் சிக்குண்டு தவிப்பதையும் தொலைக்காட்சி செய்திகளில் கண்ட எனக்கு பல்வேறு கேள்விகள் மனதில் எழ, வழக்கம் போல் என்னுடைய கணவரிடம் அதைப் பற்றி வினவ, "உனக்கு விரிவா தெரிஞ்சுக்கணுமா? ஆசிரியர் பா.ராகவன் எழுதிய "நிலமெல்லாம் ரத்தம் - புத்தகத்தை படி" என்று கூறுயதோடு Kindle பதிப்பை  வாங்கியும் கொடுத்து விட்டார். இதே ஆசிரியரின் படைப்பான  "டாலர் தேசம்" புத்தகத்தை சென்ற ஆண்டு படித்த எனக்கு அவரின் நடை பிடித்திருந்தது எனவே நானும் "நிலமெல்லாம் ரத்தம்" வாசிக்க ஆர்வத்துடன் ஆயத்தமானேன். என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அனைவரும் படிப்பதற்கு மற்றும் தகவல்களை உள்வாங்கிக் கொள்வதற்கு வசதியாக விமர்சனத்தை தொடராக பதிவிடுகிறேன். என்னுடைய இந்த முயற்சி உங்களையும் இந்த ப

மகாமுனி

"சார்பட்ட பரம்பரை" பத்தி நீ ஜாஸ்தி பேசிட்ட அதனால உனக்கு இன்னொரு ஆர்யா படத்தை Suggest பண்றேன்னு Amazon Prime மேலே எடுத்துக் குடுத்து நேத்து நான் பார்த்த படம் "மகாமுனி".  2019-ல் வெளிவந்த இந்த படத்தைப் பற்றிய  பாசிட்டிவ் கருத்துக்கள் சமூக வலைதளங்களில்  அவ்வருடத்தில் பதிவானது எனினும் Trailer பாக்கவே சீரியஸா இருக்கேன்னு நாங்க Skip செய்த படம் தான் இந்த "மகாமுனி". பெற்றோர்களால் அனாதைகளாக கைவிடப்படும் குழந்தைகள் எவ்வித சூழலில் வளர்க்கிறார்களோ அதன் தாக்கமே அவர்களிடம் மேலோங்கி இருக்கும், அவர்கள் அதிலிருந்து வெளி வர விரும்பினாலும் சமூகம் அதை அனுமதிப்பதும் இல்லை  என்பதை இப்படம் மிகத்தெளிவாகச் சொல்லிச் செல்கிறது.  ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் நினைத்தது போலவே இருந்தது எனினும் நான் பயந்த வன்முறை இல்லை. கடுகளவேயான  கதையை எவ்வாறு சுவாரசியமான திரைக்கதையாக மாற்றலாம் என்று இயக்குனர் சாந்தகுமாரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். இவருடை முதல் படமான "மௌனகுரு" அளவிற்கு இல்லை என்றாலும் அதனுடைய தாக்கம் இருந்தது எனலாம். கதை ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் ஏதோ ஒன

Subconscious Spoilers of Sarpatta Parambarai

"சார்பட்ட பரம்பரை" படத்தின் கதை என்ன? அதில் நடித்த நடிகர்கள் எப்படித் தங்கள்  உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்கள்? இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய முந்தைய படங்களில் இருந்து எவ்வாறு இதில் மாறுபடுகிறார்? படத்தின் கதைக்களம் எந்த காலகட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது? என்றெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களைத்  திறந்தாலே பல நூறு பேர் இதைப் பற்றிப் பேசிக் கொண்டும், பல இலட்சம் பேர் அதைக்  கேட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். கடந்த இரண்டு தினத்தில் "Dancing Rose" பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை என்று கூறுங்கள் பார்க்கலாம்?!   Disclaimer : கீழே  எழுதப்பட்டிருக்கும்  கட்டுரை   You Tube-ல் இந்த படத்தை பற்றிய Promo-க்களைப்  பார்த்து நரம்பு முறுக்கேறியிருக்கும் ரசிகர்களுக்கு  அல்ல 😀  கடந்த வியாழக்கிழமை அமேசான் ப்ரைம்-ல்  வெளிவந்திருக்கும் இப்படத்தை நேற்று பார்க்கும் போது என்னுள் ஓடிய எண்ணங்களை மட்டும் உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேனே!!! ஒரு சலூன் கடையில் ஒரே முடி திருத்துபவரிடம்  முடி வெட்டிக் கொண்டவர்களைப் பார்த்தாலோ, ஒரே டெய்லரிடம் சட்டை, பாண்ட் தைத்து போட்டவர